(54) திருட்டிலிருந்து செல்போனை காப்பாற்றுவது எப்படி?

பஸ்சில் செல்போனைத் தொலைப்பவர்கள் மற்றும் திருட்டுக்கொடுப்பவர்களுக்கு சில உருப்படியான(மற்றும் உருப்படாத) யோசனைகள் இதோ:

  • செல்போனை வைப்ரேஷனில் இல்லாமல், ரிங்டோனை வைத்துக்கொள்வது நல்லது. ஒருவேளை தொலைந்தால், வேறொரு செல்போன் மூலமாக கால் பண்ணி, 'போன் பக்கத்தில்தான் இருக்கிறதா' என தெரிந்துகொள்ளலாம்.


  • காலை அவசரத்தில், குளிக்க மறந்துட்டீங்களா கவலையே படாதீங்க... எவ்வளவு கூட்டமாக இருந்தாலும், பஸ்சில் ஒரு பயல் கிட்டே வரமாட்டான்.
    அதோடு, ஏதாவது அழைப்பு வந்தால், பிளக்க பேசுங்கள். மிச்சமீதி இருக்கிறவர்களும் ஓடிவிடுவார்கள். அப்புறம் என்ன கவலை?


  • சட்டை/பேண்ட் பாக்கெட்டில் செல்போனை வைக்கும் பழக்கமுள்ளவர்கள், பாக்கெட்டில் போனை செங்குத்தாக வைக்காமல், படுக்கை வசமாக வைத்துக்கொண்டால், அவ்வளவு சுலபமாக 'சுட்டுவிட' முடியாது.


  • ஒரு கார்கோவை மாட்டிகொண்டு, அதன் ஒவ்வொரு பாக்கெட்டிலும் ஒரு பொம்மை செல்போனை வைத்துக்கொள்ளவும். உண்மையான செல்லை எளிமையாகவும், போலி போனை பந்தாவாகவும் வைத்துக்கொண்டால், திருடன் எதைத் திருடுவது என்று குழம்பிப்போகக்கூடும்.


  • ரங்கநாதன் தெருவில், முப்பது ரூபாய்க்கு கிடைக்கும் 'சிலிக்கோன்' உறையை வாங்கி மாட்டிகொண்டால், இரட்டை பிரயோஜனம் உண்டு. அந்த இரண்டாவது உபயோகம், எளிதாக செல்போனை பாக்கெட்டிலிருந்து உருவமுடியாது.


  • ஒரு ரோப் அல்லது கிளிப்ட் டேக்(ஒரு முனையில், சட்டையோடு பொருத்திக்கொள்ள கிளிப் இருக்கும்) வாங்கிப்பயன்படுத்துவது சாலச்சிறந்தது.


  • நம்மைத்தவிர வேறுயார் தொட்டலும், அலாரம் அடிக்கிற இன்டெலிஜண்ட் போன் வைத்துக்கொண்டால்,திருடன் போனை தொட்டவுடனே பிடித்துவிடலாம்.(அப்புறமென்ன, 'தொட்டால் பெல் அலறும்...' என்று தலைவரின் 'படகோட்டி' பாட்டை பாடிக்கொண்டே ரெண்டு போடுபோடவேண்டியதுதான்)


  • அடிக்கடி 'உள்ளே வெளியே' செய்யாதீர்கள். தொடர்ந்து போன் வரும் என்பதாகத்தெரிந்தால், போனை பாக்கெட்டில் வைக்காமல், கையிலேயே வைத்துக்கொண்டு, போனில் ஏதோ பார்த்துக்கொண்டிருப்பதுபோல வைத்துக்கொண்டிருங்கள்(கேம் விளையாடலாம், எஸ்.எம்.எஸ் அனுப்பிக்கொண்டிருக்கலாம்). உங்கள் கவனம் முழுவதும் செல்போனில் இருப்பதால், யாராவது தொடுவார்கள்?


  • நாமே திருடன் போல (மதன் கார்ட்டூனில் வருவது போல) கெட்டப்பில் இருந்தால், அருகில் யாரும் வரமாட்டார்கள்.


  • இவ்வளவையும்மீறி செல்போன் தொலைந்துவிட்டால், அதற்காக வருந்திக்கொண்டிருக்காமல், செய்யவேண்டிய சில விஷயங்கள்...சிம்கார்டை வேறுயாரும் சமூகவிரோதமாக பயன்படுத்துவதற்குமுன் தடைசெய்யவேண்டியது... முன்னேற்பாடாக, அனைத்து போன் நம்பர்களையும் குறித்துவைத்திருந்த சிறுகுறிப்பேடுகளை பயன்படுத்துவது...


  • ஆமா, எதற்காக செல்போன்? அது இல்லாமல் வாழவே முடியாதா? அதனால...நான் சொல்லவர்றது என்னான்னா...இருக்கிற இந்த 'நிம்மதியின்மையை' விற்றுவிட்டு, வாழ்க்கையில் நிம்மதியாக இருங்கள்.(பல டெலிமார்க்கெட்டிங் கால்களிலிருந்தும், forwarded எஸ்.எம்.எஸ்-களிலிருந்தும் எஸ்கேப்)


  • (ஒரு முக்கியமான விஷயம், தடியெழுத்தில்(bold) இல்லாத குறிப்புகள் பின்பற்றுவதற்கானது அல்ல)

    6 மனமே 6...

    ஆறு விளையாட்டுக்கு செல்வன் சார் அழைத்திருந்ததன் பேரில், இந்தப்பதிவு...

    இந்த ஆறு விருப்புகள் எல்லாம் தற்சமயம் ஞாபகத்திற்கு வந்தவை மட்டுமே...
    இன்னும் பிடித்தவைகள் இருக்கலாம்...

    ஆறு புத்தகங்கள்

    கல்கியின் நாவல்கள்,
    சிபிஐயின் முன்னாள் அதிகாரி நரசிம்மன் அவர்களின் வாழ்க்கை சம்பவங்கள் அடங்கிய ஒரு புத்தகம்(மீண்டும் படிக்க ஆசை...எங்கு கிடைக்கும் என்று யாராவது சொல்லுங்களேன்), சுஜாதா அவர்களின் கேள்வி-பதில் நூல்கள்,
    மதனின் 'வந்தார்கள் வென்றார்கள்', பிற சரித்திர நாவல்கள்,
    சில சுயமுன்னேற்ற நூல்கள்...

    முணுமுணுக்கும் ஆறு பாடல்கள்

    குழலூதும் கண்ணனுக்கு...
    ஒரு கிளி உருகுது...
    ஆவாரம்பூவு...(அச்சமில்லை2)
    கீரவாணி...
    சுவாரஸ்யமானது காதல்...(கோடம்பாக்கம்)
    tanha dil...(ஷான்)

    (இந்த லிஸ்ட் பெரியது...இளையராஜாவின் மோகன், ராமராஜன் பாடல்களை ஒன்று விடாமல் சேர்த்துகொள்ளவும் :) )

    ஆறு காமெடியன்கள்

    சார்லி சாப்ளின், கலைவாணர், நாகேஷ், வடிவேலு, விவேக்,ரோவன்('மிஸ்டர் பீன்' போகோ உபயம்)...

    ஆறில் பூ (மிதந்து) வரும், (தமிழ்ப் வலைப்)பூவில் ஆறு வருகிறதே !!! ஹி..ஹி...

    அன்புடன்,
    கார்த்திகேயன்

    (52) நீங்கள் எப்படிப்பட்ட ப்ளாக்கர்?

    இணையத்தில் இந்த தளத்தில், நீங்கள் எப்படிப்பட்ட ப்ளாக்கர் என்பதை சொல்வதற்கு காத்திருக்கிறார்கள்... ஒரு சில கேள்விகளுக்கு பதில் சொல்வதன் மூலம் நீங்களும் தெரிந்துகொள்ளலாம்...

    நான் கொடுத்த பதில்களின் அடிப்படையில் எனக்கு வந்தது இதுதான்...

    Your Blogging Type is Confident and Insightful

    You've got a ton of brain power, and you leverage it into brilliant blog.
    Both creative and logical, you come up with amazing ideas and insights.
    A total perfectionist, you find yourself revising and rewriting posts a lot of the time.
    You blog for yourself - and you don't care how popular (or unpopular) your blog is!


    மேலே அங்கங்கே, Brain powerனும், Brilliantனும் சொல்லியிருப்பாங்க...

    அதையெல்லாம் கண்டுக்காதீங்க...ஹி..ஹி...

    (51) பதிவுகள் படிக்கப்படவேண்டும்.

    வியாழன் காலை சன் செய்திகளில், தமிழ் ப்ளாக்குகளை பற்றி ஒரு செய்தித்தொகுப்பு வந்தது. இதுபோன்ற promotions நல்லதுக்குத்தான். இன்னும் சில ஆயிரம் புதியவர்கள், தமிழ் பதிவுகளை படிக்கத்தொடங்கியிருப்பார்கள்...

    வெளிநாடுகளில், 'ப்ளாக்கர்' என்றால் புரட்சியாளன், 'ப்ளாக்' என்றால் ஆயுதம். ஆனால் இங்கே அப்படியில்லை. காரணம், இணையத்திற்கு போய் படிக்கிறவர்கள் எண்ணிக்கை குறைவு.

    பதிவர்களுக்கு, பொதுவான உள்விருப்பம் ஒன்று உண்டென்றால் அது தமது பதிவுகளை நிறையபேர் படிக்கவேண்டும் என்பதுதான்.

    ஒரு பதிவோ படைப்போ இணையத்தோடு இருந்துவிட்டால், அதைப்படிக்கப்போவது வெகுசிலரே. அதனால், உலகெங்கிலும் உள்ள (இணையப்பக்கமே போகாத) தமிழர்களையும் படிக்கச்செய்வதற்கு ஒரே வழி - 'பதிவுகளை அச்சுவடிவில் கொண்டுவருவதுதான்'.

    ஏராளமான சிற்றிலக்கிய நண்பர்கள் அச்சிலிருந்து இணையத்திற்கு மாறிவந்தவர்கள் என்பதால், அவர்களும், என் போன்ற புதியவர்களும் இந்த விஷயத்தில் ஆர்வமாக இருப்பார்கள் என்பது என் நம்பிக்கை.

    அதற்கு முதலில் என்ன செய்யவேண்டும்? தமிழ்மணம் இணையத்தில் செய்கிற சேவையை, அச்சில் புத்தகமாகவோ, இதழாகவோ தொடங்கலாம்.இதை விற்பனைக்கும் அனுப்பலாம்.(பின்னே காசு போடுறாங்கல்ல).

    எந்த பதிவுகளை அச்சில் கொண்டுவருவது?
    அதிக பின்னூட்டப்பெற்ற பதிவுகள் மற்றும் பரிந்துரை செய்யப்பட்ட பதிவுகள்.
    (ஆசிரியர்கள்,மற்றவர்களின் படைப்புகளை சுருக்கக்கூடாது என்பது முக்கியமான நிபந்தனை)

    சரி, இதனால் பதிவாளர்களுக்கு என்ன லாபம்?
    ஏற்கனவே Royalty மற்றும் copyright ஆகியவைகளை எதிர்பார்க்காமல் பதிவுகளில் எழுதிக்கொண்டிருக்கும் பதிவர்களுக்கு, இங்கேயும் விட்டுத்தர வேண்டுகோள் விடுக்கலாம்.
    'நிறைய தமிழர்கள் படித்தார்கள்' என்ற விருப்பம் ஈடேறுகிறதே?

    வாசகர் கடிதத்தின் மூலம் இன்னும் மெருகேற்றலும் செய்யலாம்.

    எதிர்ப்பார்க்கக்கூடிய ஒரே ஒரு பிரச்சனை - "உள்ளடக்கத்தகவல் உரிமை".டான் ப்ரெளவுனுக்கும் இந்தப்பிரச்சனை வந்தது. 'தான் கண்டறிந்த உண்மையின் அடிப்படையில் எழுதப்பட்டதுதான் 'டாவின்சி கோட்'.அதற்கு நஷ்ட ஈடு தரவேண்டும்' என ஒருத்தர் இவர்மீது வழக்கு தொடர்ந்தார்.(ஆனால் தீர்ப்பு - "இது plagiarism அல்ல. நஷ்ட ஈடு எதிர்பார்ப்பது முறையாகாது")

    நமது பதிவாளர்கள் பெரும்பாலும் மேற்கோள் காட்டுவது, பிரபல பத்திரிக்கைகளின் படங்களையும் கருத்துக்களையும் வைத்துதான் என்பதால், அம்மாதிரி பதிவுகளுக்கு சிக்கல்கள் உண்டு.

    'எல்லாம் சரி...இவ்வாறு அச்சாக வெளிவந்தால், இணையத்தில் நமது பதிவுக்கு வருகிறவர்களின் எண்ணிக்கை குறைந்துவிடுமே...'

    அதற்கும் வழியுண்டு...'குங்குமம்' ஸ்டைலில், "இந்த வாரம் தமிழ்ப்பூவில்..." என்று ஆங்காங்கே கட்டம்கட்டி சொல்லி, முகவரியையும் கொடுத்துவிட்டால், அவர்களாக வந்து ஆன்லைனில் படித்துக்கொள்ளப்போகிறார்கள்... :-)

    இந்த யோசனையால், இணையத்தில் படிக்கிறவர்களின் எண்ணிக்கை அதிகமாகுமே தவிர குறையவாய்ப்பில்லை.

    என்ன சொல்றீங்க?