கலைஞரும் சிலேடையும்...

பல சர்ச்சைக்குறிய சிலேடைகளுக்கிடையே தமிழ்வருடப்பிறப்பன்று சன் டீவி கவியரங்கத்தில் கலைஞர் சொன்ன அரசியல் சாயம் இல்லாத ஒரு சின்ன சிலேடை, சுவாரஸியமானது...

மேடையில் பாடிக்கொண்டிருந்த பாடகனிடம் பார்வையாளர் ஒருவர் கேட்கிறார்...

"இன்னும் ஒரு 'பத்துப்பாட்டு' பாடுக"

"பத்துப்பாட்டு பாட 'எட்டுத்தொகை' அதிகம் தருவீரோ?"

"எட்டுத்தொகை என்ன...'ஐங்குறுநூறு'-ஏ தருகிறேன்"

"இல்லையப்பா எனக்கு...'அகத்தில் நானூறும், புறத்தில் நானூறும்' வேண்டும்..."

அதாவது அவன் கேட்டது, கணக்கில் நானூறு, கருப்பில் நானூறு...

நேனோ ஞாபகங்கள்...

(குமாரின் நேனோ பதிவை படித்தபின் எழுதிய சில துளிகள்)

அப்பொழுது, எங்கள் தஞ்சாவூர் சண்முகாவில், முதன்முதலாக 'டுபாக்கூர்' ஆய்வுமையம் தொடங்கியிருந்த சமயம்...(மனிஷ விகார் TIFAC-COREக்கு மெஸ்காரர்கள் இட்ட செல்லப்பெயர்)

நேனோ தொழில்நுட்பத்தின் ஒரு வார கருத்தரங்குக்கு, உலக ஆராய்ச்சியாளர்கள் நிறைய பேர் வந்திருந்தார்கள்...(ஆஸ்திரேலிய விஞ்ஞானி ஒருத்தருக்கு நம்மூர் தோசை மிகவும் பிடித்துவிட்டதாம்.அப்படி என்னயா இருக்கு நம்மூரு தோசையில).

சீனியர் ஆராய்ச்சியாளர்கள்,புதிதாக ஆராய்ச்சி மேற்கொண்டிருக்கிறவர்களுக்கு மட்டும்தான் அனுமதி. முதுகலை மாணவர்களான எங்களுக்கு கூட அனுமதியில்லை...(பேராசிரியர்களே இரண்டு பேர்தான் கலந்துகொண்டார்கள்) 'ப்ளாக்கில் கூட டிக்கெட் கிடைக்காத' பரிதாபத்தோடு சுற்றிக்கொண்டிருந்தோம்...

'நேனோ-னா என்ன?' என்ற ஆர்வத்தில் அப்படியிப்படி போராடி ஒரு சாவேனர்-ஐ 'சுட்டு' அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சம் தெரிந்துகொண்டேன்...

மைக்ரோ என்ற அளவை ஆயிரமாக உடைத்தால், அந்த 'ஆயிரத்தில் ஒருவன்' தான் நேனோ. இப்போ இருக்கிற கணினி(மைக்ரோகம்ப்யூட்டர்), நுண்ணியசெயலாக்கி(மைக்ரோபிராஸஸர்) ஆகியவை நேனோவாக மாற்றப்பட்டால், மீநுண்ணியசெயலாக்கிகள்(Nanoprocessors), மீச்சிறியகணினிகள் கிடைக்கும்.

கேன்சர் செல்களை அழிக்கும் நேனோ ரோபோக்களை "doctor in the cell" என்ற செல்லப்பெயரால் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்... வெளியிலிருந்து இயக்கப்பட்டாலும், கேன்சரை அழிக்கிறேன் பேர்வழி என நமது வீரர்களை(மனித செல்கள்) தாக்கிவிட்டால் என்ன செய்வது என்பதையும் யாராவது சொல்லுங்களேன்.

எழுத்தாளர் சுஜாதா அவர்கள் நேனோவில் பல்வேறு ஆராய்ச்சிகள் நடப்பது பற்றி ஒருமுறை குறிப்பிட்டதாக நினைவிருக்கிறது (கற்றதும்...பெற்றதும்)

'கைட்ரஜன் இயற்கையில இருக்கு, ஆக்ஸிஜனும் இருக்கு. ரெண்டும் சேர்ந்த மூலக்கூறு தண்ணியும் இயற்கையிலேயே இருக்கு...

அதேபோல காகித உற்பத்திக்கான மூலப்பொருள் இயற்கையிலேயிருந்துதான் கிடைக்கிறது...தண்ணீர் மாதிரி காகிதத்தையும் இயற்கையிலேயே கிடைக்கச்செய்யலாமா?' என்றுகூட ஆராய்வதாக சொல்லியிருந்தார் அவர்.

கருத்து சொல்ல வாங்க...