"பொய் வாழ்வின் பூரணமே"

ஐடி கம்பெனிகளில் புதிதாக சேரும் பொறியாளர்களை, 'Welcome to this company's family' என்று வரவேற்பார்கள்..

ஆனால் அவர்களை Layoff செய்யும்போது Employee-களின் குடும்பத்தை பற்றி நினைத்து பார்ப்பார்களா..??

கண்டிப்பாக மாட்டார்கள் !!!

வேலையிழப்பினால், அவர்களுக்கும் நிதி நெருக்கடி இருக்கும்..
அவசரகால நடவடிக்கை தேவைப்படும்..

அந்த சமயத்தில், நிறுவனங்கள் செய்யக்கூடிய குறைந்த பட்ச உதவி, அவர்களுக்கு Outplacement வசதிகள் செய்து தருவதே..

Outplacement என்றால் அடுத்து எதாவது ஒரு நிறுவனத்தில் அவர்கள் வேலைக்கு சேருவதற்கு உதவுவது..

'எதற்காக வேலை மெனக்கெட்டு அவர்களுக்காக நேரத்தை வீணாக்க வேண்டும்???'

ஏனெனில் அவர்கள் (ஒருகாலத்தில்) நிறுவனத்தின் குடும்பத்தினர்தான்.. நிறுவனம் சிறக்க பாடுபட்டவர்கள்தான்..

அவர்களின் அவசரகாலத்திற்கு உதவாவிட்டால், நிறுவனத்தின் அவசரத்திற்கு அவர்களும் உதவமாட்டார்கள்..

அதாவது, புது பணிகள் வரவில்லை என்றுதான் பணியாளர்கள் அனுப்பபடுகிறார்கள்... இன்னும் சில நாட்களில், நிறைய பணிகள் வரும்பொழுது, நிறுவனத்தின் தேவைக்கு ஏற்ற நிபுணர்கள் கிடைக்கமாட்டார்கள்.. ஏனெனில், விலக்கப்பட்டவர்கள் வேறு துறையை தேர்ந்தேடுத்திருப்பர்கள்..

இன்னொரு பக்கம், தகவல் தொழில் நுட்ப மாணவர்கள் குறைவார்கள்.. மற்ற மாணவர்களும் ஐடிக்கு வரமாட்டார்கள்..

ஆகவே, Employerகளே, லாபத்தை மட்டுமே தொலைநோக்கில் பார்க்காமல், 'Resource' எனப்படும் இந்த மென்பொருள் பொறியாளர்களையும் முக்கியமாக மறக்காதீர்கள்...

அவ்வாறு செய்தால்தான் உங்கள் 'பொய் வாழ்வு பூரணமடையும்'...

Labels: , , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home