(63) யாராச்சும் கேள்வி கேப்பீங்க ???

ஒரு சமயம் எய்ட்ஸ் விழிப்புணர்ச்சி முகாம் ஒன்று, எங்கள் ஊர் கல்லூரியில் நடந்தது..

பேராசிரியர் ஒருவர், எய்ட்ஸ் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்துக்கொண்டிருந்தார்.

அப்பொழுது ஒரு மாணவர், "எச்சிலால் எய்ட்ஸ் பரவுமா?
(அதாவது - 'முத்தத்தால் எய்ட்ஸ் பரவுமா?')" எனக்கேட்க,
அதற்கு அவர் அளித்த பதிலை காதை(மூக்கை ??!!) பொத்திக்கொண்டு படிக்கவும்...

"சும்மா ஒரு துளி, ரெண்டு துளிலெல்லாம் வரவாய்ப்பில்ல... எச்சிலில் இருக்கிற
சிறிய அளவு எய்ட்ஸ் கிருமிகள் வயிற்று அமிலத்தில் அழிந்துவிடும்.. ஆனால், ஒரு வாளி நிறைய எய்ட்ஸ் நோயாளியின் எச்சிலை 'மடக்,மடக்' குனு குடிச்சா, ஒருவேளை எய்ட்ஸ் வருவதற்கான வாய்ப்பிருக்கு..!!!"


* * * * * *

சிரிப்பு கடை


மென்பொருளாளர்: "என் கனவுல எப்பவும் ப்ரொகிராம் பண்றமாதிரியே கனவு வருது..!!!"

திட்டமேலாளர்: "இன்னிக்குள்ள முடிச்சி தந்திறியா?"

மென்பொருளாளர்:"???!!!!"

* * * * * *

ஒரு ஃபர்னிச்சர் கடையில்,

"அவரு ரொம்ப எளிமையானவரா இருக்கலாம். அதுக்காக இப்படியெல்லாமா கேப்பாரு..."

"என்ன கேட்டாரு?"

"'டிராயர்' உள்ள மேஜை வேணாமாம். வெறும் 'கோவணம்' உள்ள மேஜை போதுமாம்..!!!"

* * * * * *