திரும்பிப்பார்க்கிறேன்...

ஏதோ இப்போதுதான் தொடங்கியதுபோல இருந்தது...
ஆனால், ஒரு வருடம் ஆகிவிட்டது...
வலைப்பூ ஆரம்பித்து !

வருடத்தில், கடந்து வந்த பாதையை திரும்பிப்பார்க்கையில், ஏகப்பட்ட வலைபதிவாளர்களின் சுவடுகள்...

என் காலடித்தடயத்தை கண்டேபிடிக்கமுடியவில்லை...

ஏதோ மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, 'இதோ ஒரு சுட்டி,இதோ ஒரு சுட்டி'என அவ்வப்போது 'உள்ளேன் ஐயா' போட்டுக்கொண்டிருக்கிறேன்...

இந்த ஒரு வருடத்தில், பெரிதாக எதையும் செய்துவிடவில்லை...
எல்லையற்ற ஊடகமான இணையத்தில், நல்ல நண்பர்களை சம்பாதித்ததைத் தவிர.

நிறைய எழுதவேண்டும் என்ற ஆசை இருக்கிறது...
('அதற்கு நிறைய படிக்கவும் வேணும்' என்று நானே தாமதிக்கிறேன்)

மீண்டும் வருகிறேன்...ஒரு நல்ல நாளில் :))

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home