(51) பதிவுகள் படிக்கப்படவேண்டும்.

வியாழன் காலை சன் செய்திகளில், தமிழ் ப்ளாக்குகளை பற்றி ஒரு செய்தித்தொகுப்பு வந்தது. இதுபோன்ற promotions நல்லதுக்குத்தான். இன்னும் சில ஆயிரம் புதியவர்கள், தமிழ் பதிவுகளை படிக்கத்தொடங்கியிருப்பார்கள்...

வெளிநாடுகளில், 'ப்ளாக்கர்' என்றால் புரட்சியாளன், 'ப்ளாக்' என்றால் ஆயுதம். ஆனால் இங்கே அப்படியில்லை. காரணம், இணையத்திற்கு போய் படிக்கிறவர்கள் எண்ணிக்கை குறைவு.

பதிவர்களுக்கு, பொதுவான உள்விருப்பம் ஒன்று உண்டென்றால் அது தமது பதிவுகளை நிறையபேர் படிக்கவேண்டும் என்பதுதான்.

ஒரு பதிவோ படைப்போ இணையத்தோடு இருந்துவிட்டால், அதைப்படிக்கப்போவது வெகுசிலரே. அதனால், உலகெங்கிலும் உள்ள (இணையப்பக்கமே போகாத) தமிழர்களையும் படிக்கச்செய்வதற்கு ஒரே வழி - 'பதிவுகளை அச்சுவடிவில் கொண்டுவருவதுதான்'.

ஏராளமான சிற்றிலக்கிய நண்பர்கள் அச்சிலிருந்து இணையத்திற்கு மாறிவந்தவர்கள் என்பதால், அவர்களும், என் போன்ற புதியவர்களும் இந்த விஷயத்தில் ஆர்வமாக இருப்பார்கள் என்பது என் நம்பிக்கை.

அதற்கு முதலில் என்ன செய்யவேண்டும்? தமிழ்மணம் இணையத்தில் செய்கிற சேவையை, அச்சில் புத்தகமாகவோ, இதழாகவோ தொடங்கலாம்.இதை விற்பனைக்கும் அனுப்பலாம்.(பின்னே காசு போடுறாங்கல்ல).

எந்த பதிவுகளை அச்சில் கொண்டுவருவது?
அதிக பின்னூட்டப்பெற்ற பதிவுகள் மற்றும் பரிந்துரை செய்யப்பட்ட பதிவுகள்.
(ஆசிரியர்கள்,மற்றவர்களின் படைப்புகளை சுருக்கக்கூடாது என்பது முக்கியமான நிபந்தனை)

சரி, இதனால் பதிவாளர்களுக்கு என்ன லாபம்?
ஏற்கனவே Royalty மற்றும் copyright ஆகியவைகளை எதிர்பார்க்காமல் பதிவுகளில் எழுதிக்கொண்டிருக்கும் பதிவர்களுக்கு, இங்கேயும் விட்டுத்தர வேண்டுகோள் விடுக்கலாம்.
'நிறைய தமிழர்கள் படித்தார்கள்' என்ற விருப்பம் ஈடேறுகிறதே?

வாசகர் கடிதத்தின் மூலம் இன்னும் மெருகேற்றலும் செய்யலாம்.

எதிர்ப்பார்க்கக்கூடிய ஒரே ஒரு பிரச்சனை - "உள்ளடக்கத்தகவல் உரிமை".டான் ப்ரெளவுனுக்கும் இந்தப்பிரச்சனை வந்தது. 'தான் கண்டறிந்த உண்மையின் அடிப்படையில் எழுதப்பட்டதுதான் 'டாவின்சி கோட்'.அதற்கு நஷ்ட ஈடு தரவேண்டும்' என ஒருத்தர் இவர்மீது வழக்கு தொடர்ந்தார்.(ஆனால் தீர்ப்பு - "இது plagiarism அல்ல. நஷ்ட ஈடு எதிர்பார்ப்பது முறையாகாது")

நமது பதிவாளர்கள் பெரும்பாலும் மேற்கோள் காட்டுவது, பிரபல பத்திரிக்கைகளின் படங்களையும் கருத்துக்களையும் வைத்துதான் என்பதால், அம்மாதிரி பதிவுகளுக்கு சிக்கல்கள் உண்டு.

'எல்லாம் சரி...இவ்வாறு அச்சாக வெளிவந்தால், இணையத்தில் நமது பதிவுக்கு வருகிறவர்களின் எண்ணிக்கை குறைந்துவிடுமே...'

அதற்கும் வழியுண்டு...'குங்குமம்' ஸ்டைலில், "இந்த வாரம் தமிழ்ப்பூவில்..." என்று ஆங்காங்கே கட்டம்கட்டி சொல்லி, முகவரியையும் கொடுத்துவிட்டால், அவர்களாக வந்து ஆன்லைனில் படித்துக்கொள்ளப்போகிறார்கள்... :-)

இந்த யோசனையால், இணையத்தில் படிக்கிறவர்களின் எண்ணிக்கை அதிகமாகுமே தவிர குறையவாய்ப்பில்லை.

என்ன சொல்றீங்க?

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home