மனிதன்பாதி...5-(அறிவியல் தொடர்கதை)

போலீஸ் ஸ்டேசனில்...

கமிஷனரை சுற்றி மற்ற போலீஸ்காரர்கள் கவலையுடன் நின்றுகொண்டிருந்தார்கள்...

"நல்லா விசாரிச்சீங்களா இன்ஸ்பெக்டர்?"

"விசாரிச்சுட்டேன் சார். வாயே திறக்கமாட்டேங்கிறான்"

"ஏதும் தீவிரவாதியா இருப்பானோ?"

"இல்லீங்க சார்.அழுத்தக்காரனா தான் இருக்கான். ஆனால், தீவிரவாதி மாதிரி தெரியல..."

"நாமளா முடிவு செய்யமுடியாது இன்ஸ்பெக்டர். இன்னும் முயற்சி பண்ணிப்பாருங்க.எதுவும் சொல்லலைனா ரெட்ரூம் ட்ரீட்மெண்ட் தான் பண்ணணும். கோர்ட்டிலிருந்தும் அனுமதி கிடைச்சாச்சு. என்ன சொல்றீங்க?" என எழுந்தார் கமிஷனர்.

"யெஸ் சார்" விறைப்பாக ஒரு சல்யூட் போட்டார் இன்ஸ்பெக்டர்.

ஆனால், சக்ரவர்த்தி அசரவில்லை... அடித்துஅடித்து காவல் அதிகாரிகளின் கைதான் வலித்தது...

இன்ஸ்பெக்டர் யோசித்தார்..."இவ்ளோ அடி அடிச்சிருக்கோம்...ஒரு கதறல்...ஒரு இரத்தம்...ம்கூம்"

திடீரென அவருக்கு ஒன்று தோன்றியது, "ஒருவேளை அப்படி இருக்குமோ?"

போனில் சிற்சில எண்களைத் தட்ட கமிஷனர் தொடர்பில் வந்தார்...

சற்றுநேரத்திற்கெல்லாம் அவர் சக்ரவர்த்தியை அழைத்துப்போனது...

மருத்துவமனைக்கு...

(அடுத்த பதிவில் தொடர்கிறது)

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home