மனிதன்பாதி...4-(அறிவியல் தொடர்கதை)

அதிகாலை நேரம்...

தேவ் காபியை உறிஞ்சியபடி பேப்பர் படித்துக்கொண்டிருந்தார்...

'காலைக்காபியுடன் பேப்பர் படிப்பது எவ்வளவு சுகம்?'

தொழிலதிபர் வேலுச்சாமி கொலையுண்டதுபற்றி தலைப்புசெய்தி வெளியாகியிருந்தது...
முதல்பக்கம் தாண்டி அடுத்தபக்கம் ஒரு செய்தி கவனத்தை கவர்ந்தது. அது ஒரு லாரி ட்ரைவரின் மர்மக்கொலை பற்றியது...

கூர்ந்து கவனித்தால்...
தேவ்விற்கு நெஞ்சே வெடித்துவிடும்போல இருந்தது...
அன்று கோவிலில் பார்த்த அதே ஆள்...கொடூரமுறையில் கொலையாகி...

திடீரென வாசலில் அழுத்தமான வாகன ப்ரேக் சத்தம்...தொடர்ந்து பூட்ஸ்களின் சத்தம்...

நொடியில் ரூமிற்குள் சிற்சில காக்கிச்சட்டைக்காரர்கள் தோன்றினார்கள்...

"சார் இங்கே சக்ரவர்த்தி யாருங்க?" என்றார் இன்ஸ்பெக்டர்.

"எ...என் ப்ரெண்ட் தான். என்ன விஷயம் சார்?"

"கொஞ்சம் கூப்பிடுறீங்களா?"

அழைத்ததும் சக்ரவர்த்தி வந்தார்.
"யோவ், இவர்தானா பாத்துச்சொல்லு"

அருகில் வந்திருந்த ஆள் "ஆமா சார், இவர்தான் பிறந்தநாள் கிப்ட்டுனு சொல்லி, ஒரு கிப்ட் பாக்ஸை எங்கிட்ட குடுத்து வேலுச்சாமி ஐயாகிட்ட கொடுக்கச்சொன்னார்"

"மிஸ்டர் சக்ரவர்த்தி...இவர் அந்த ஓட்டலில் பணிபுரிகிற ஆள். நீங்கள் செஞ்ச கொலையை கண்ணால் கண்ட முக்கியமான சாட்சி. என்ன போலாமா?" இன்ஸ்பெக்டர் கண்டிப்பான குரலில் கேட்டார்.

மறுவார்த்தை சொல்லாமல் சக்ரவர்த்தி அமைதியாக பின் தொடர்ந்தார்.

(தொடரும் - கிளைமாக்ஸை யூகிக்கமுடிந்தால் உடனே சொல்லுங்களேன்)

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home