கண்ணுக்குத் தெரியாத பகைவன்

என்.எஸ்.எஸ் முகாமின்போது, ஒரு பேராசிரிய நண்பர் கேட்ட கேள்விக்கு இப்பொழுது விடை கிடைத்திருக்கிறது...

"ஒரு மொபைல் போன் வைத்திருந்தாலே அந்த கதிர்வீச்சு, பாதிப்பேற்படுத்தும்னு சொல்றாங்க. செல் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகிவிட்ட இந்தக்காலத்தில், நிறைய கதிர்வீச்சுக்கள் மனிதனை பாதிக்காதா?" இதுதான் அவருடைய சந்தேகம்...

"உடல் உபாதைகள் ஏதும் தோன்ற வாய்ப்பில்லை... மனநிலையில் சிறுசிறு மாற்றம் நிகழ வாய்ப்புண்டு", என்று அப்போதைக்கு சொல்லிவைத்தேன்...

இன்று(5/3/06), தி கிண்டுவில் ஆனந்த் பார்த்தசாரதி ஒரு தகவல் எழுதியிருந்தார்... ஈ.எம்.ஐ.ஸி(Society of ElectroMagnetic Interference and Compatibility) என்ற வல்லுனர்களின் கருத்தரங்கில், 'ரேடியோ கதிர்வீச்சினால் மனிதனுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?' என்று விவாதித்திருக்கிறார்கள்.

நீர், காற்று, ஒலி மாசுபடுவதுபோல இதுவும் ஒரு மாசுசீர்கேடுதான்(Radiation Pollution) என்று ஒரு கருத்தையும் சொல்கிறார்கள்.

Cogent என்ற தில்லி ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, "இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட அதிர்வெண் அளவு - ஒரு சதுர மீட்டருக்கு 10 மைக்ரோவாட்ஸ் ஆகும். ஆனால், இந்த அளவே சிறுசிறு பாதிப்பை ஏற்படுத்துகிறது..."

உதாரணத்திற்கு, தூக்கத்திலிருந்து திடீர் என எழுந்துவிடுதல் பத்து பேர்களில் ஒருவருக்கு ஏற்படுகிற பொதுவான பாதிப்பு.

மேலும், கதிர்கசிவினால் ஏற்படும் பாதிப்புகள்-பசியின்மை, தூக்கமிடர்பாடு, மிகுந்த எரிச்சல்...

இது பெரும்பாலும் மனநிலையோடு தொடர்புடையதாக இருக்கிறது... ஏனெனில், இந்த செயற்கை அலைகள், மனிதனின் (இயற்கையான)எண்ண அலைகளோடு ஒத்துவமையாக இயங்குவதுதான் காரணம் (closer to natural resonance)...

மொபைல் கதிர்வீச்சாவது பரவாயில்லை... எப்.எம் அலைகளால் ஏற்படும் கதிர்வீச்சில் சீர்கேடு இன்னும் அதிகம். மொபைல் கதிர்வீச்சை விட 4 அல்லது 5 மடங்கு பாதிப்பு, எப்.எம் ரேடியோவின் கதிர்வீச்சினால் ஏற்படுகிறது என்றும் கூறப்படுகிறது...

காரணம்...எப்.எம் ரேடியோக்கள் இயக்கப்படுவது, 30 மெகாகெர்ட்ஸிருந்து 300 மெகாகெர்ட்ஸ் வரையுள்ள அதிர்வெண் பட்டையில். (மனித எண்ண அலைகளின் அதிர்வெண்ணுக்கு ஒத்தது)

ஆனால், மொபைல் போனில் இரண்டே அதிர்வெண்களில்தான் இயக்கப்படுகிறது.(இந்தியாவில் 900 மெகாகெர்ட்ஸ் மற்றும் 1800 மெகாகெர்ட்ஸ்). அதனால், எப்.எம் ரேடியோ கதிர்வீச்சின் பாதிப்புதான் அதிகம்...

'செம HOT மச்சி' என்று விஷயம் இல்லாமலா சொல்லுவார்கள்...

'இங்கே இதைப்பற்றி இன்னும் படிங்க படிங்க படிச்சிகிட்டேயிருங்க'

2 Comments:

Blogger Thangamani said...

பயனுள்ள பதிவு நன்றி!

1:28 AM  

Blogger சிவக்குமார் (Sivakumar) said...

//'செம HOT மச்சி' என்று விஷயம் இல்லாமலா சொல்லுவார்கள்...//

:-)

4:34 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home