கிரிட் கம்ப்யூட்டிங் கருத்தரங்கில்...

எங்கள் கல்லூரியின் கணினித்துறையும், டாடா கன்சல்டன்ஸி செர்வீசஸ்-ம் சேர்ந்து நடத்தும் Grid Computingகின் கருத்தரங்கு, எங்கள் கல்லூரி வளாகத்தில் கடந்த வாரம் நடந்தது...

பல்வேறு கல்லூரிகளில் இருந்து, மூத்த ஆசிரிய பெருமக்கள் மற்றும் பகிர்ந்திணைப்பு கணினித்துவத்தை ஆராய்ச்சியாக மேற்கொள்வோர் என நிறையபேர் வந்திருந்தார்கள்...

இந்தத்துறையிலேயே தலைசிறந்து விளங்கும் சீடாக் பூனேயின் (PARAM-Padma புகழ்) ஆலோசனையின்பேரில் சீடாக்(பெங்களுரூ)லிருந்தும், ஐ.ஐ.டி, எம்.ஐ.டி, ஐ.எம்ஸி, டி.சி.எஸ்...இங்கெல்லாமிருந்தும் கூட சில நிபுணர்கள் வந்து தங்கள் கண்டறிந்த அல்லது ஆராய்ந்து கொண்டிருக்கிற அரிய கருத்துக்களை பற்றி சொன்னார்கள்...

விமானநிலையத்திலிருந்து அழைத்துவந்தபோது எனது எடக்குமடக்கான ஐயங்களுக்கு பொறுமையாக விளக்கம் தந்தவர் சீடாக் ஆராய்ச்சியாளர் டாக்டர் பிந்துமாதவா.

ஐ.எம்.எஸ்ஸி-லிருந்து வந்திருந்த விஞ்ஞானி, ஆர்வமும் தகுதியும் இருப்பின் தன்னை சந்திக்குமாறு சொல்லிவிட்டுச்சென்றார்.

இளைஞர்களான கோவேந்தன், ரெட்டி ஆகியோரும் ஆர்வமாக விஸ்வா கருவியைப் பற்றி விளக்கினார்கள். உண்மையிலேயே கிரிட்டில் என்ன நடக்கிறது என்பதை புரியவைத்த ஒரு நல்ல செயல்முறைவிளக்கம் இது.

எல்லோரும் தரும் ஊக்கத்தை பார்க்கையில்,கிரிட் ஆராய்ச்சிகளுக்கு நிறைய மக்கள் முன்வரவேண்டும் என ரத்தினகம்பளம் போட்டு வரவேற்கிறார்களோ என்றுதான் தோன்றுகிறது...

எல்லா செஸசனிலும் கலந்துகொண்டு நான் புரிந்துகொண்ட மிகச்சில விஷயங்களை இங்கே தருகிறேன்... (கணினி ஆராய்ச்சியில் நாம் எங்கே போய்க்கொன்டிருக்கிறோம் என்பதை தெரிந்துகொள்வதற்காக)

பல்வேறு கணினிகளை இணைக்கும்போது நேரடியாக சுலபமாக ஒரு கம்பி மூலம் இணைத்துவிடமுடியாது...

ஒவ்வொரு நெட்வொர்க்குக்கும் ஏன் ஒவ்வொரு கணினிக்கும் தனித்தனி தகவுதரங்கள், விதிகள் இருக்கும். அதையெல்லாம் கருத்தில்கொண்டுதான் பல்வேறு கணினிகள் இணைக்கப்படுகிறது. இது ஆரம்பநிலை.

இணைக்கப்பட்ட கணினிகளுக்கிடையே தகவல்பரிமாற்றம், பணி இடம்மாற்றம் ஆகியவை சில தகவல்பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி நிறைவேற்றப்படுகிறது...

சக்திவாய்ந்த கணினிகளின் செயலிழப்புகளின் போது, அதைப்போலவே உள்ள மற்றொரு கணினிக்கு(Mirror) 'தானாகவே' செயல் இடமாற்றம்(Process Migration) முதலான பணிகளுக்கு மாற்றிக்கொள்ளும்போது தற்காலங்களில் பயனாளர்களுக்கு இது தெரியாதவாறு நிகழும்...இது இரண்டாவது நிலை...

ஒரு நெட்வொர்க்கில் உள்ள கணினிகள் தாங்களாகவே மற்ற நெட்வொர்கின் வளங்களை பயன்படுத்துபோது சில மேலாண்மைக்கு கீழ்படியவேண்டும். எது முக்கியத்துவம் வாய்ந்த பணி? மற்றும் எது சீக்கிரம் முடிக்கவேண்டிய பணி? என்பதை முடிவு செய்ய ஒரு மேலாண்மை தேவைப்படுகிறது. அதுதான் கிரிட் என்பது என் புரிதல்.(கிரிட் என்பது பகிர்வு கணினித்துவத்தின் புதிய பெயர்தான்...)

வளங்களை பயன்படுத்துவதற்கு எவ்வளவு கட்டணம் என்பதையும் கிரிட் மேலாண்மை தானாகவே தெரிவிக்கிறது...

கிரிட்டில் உள்ள பணிகளை பிரித்து செயல்படுத்துவதில் மற்றும் தகவலுக்கு பாதுகாப்பளிப்பதில் - இவைகளில்தான் இன்றைய பிரச்சனைகளும் ஆராய்ச்சிகளும். பகிர்விணைப்பு கணினி கருத்துருக்களில் முக்கியமாக இவை கருதப்படுகின்றன.

சேதி-அட்ஹோமில் பாருங்கள். நீங்கள் அங்கே பதிவுசெய்து கொண்டீர்கள் எனில் உங்கள் கணினியின் திறனை உபயோகமானவற்றுக்கு பயன்படுத்துவார்கள்...இந்த கணினியைத்தான் பயன்படுத்துகிறோம் என்று அவர்களுக்கும், இன்னவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்று நமக்கும் தெரியாது. உலகம் முழுவதும் இப்படி இணைக்கப்படும்போது, எண்ணற்ற திறன் கிடைக்கிறது...

சூப்பர் கணினிகள் கூட செய்யமுடியாத பல காரியங்களை இப்படி நிறைவேற்றிக்கொள்ளமுடியும் என்பதுதான் இதன் சாராம்சம்...

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home