மனிதன்பாதி...3-(அறிவியல் தொடர்கதை)

அன்று அந்த நட்சத்திர ஓட்டலில் திருவிழா களைகட்டியிருந்தது.
காரணம்...தொழிலதிபர் வேலுச்சாமியின் பிறந்தநாள்.

மிகுந்த மகிழ்ச்சியுடன் தன் காரில் ஏறியமர்ந்தார் வேலுச்சாமி. கேட்-ஐ திறக்க ஆளின்றி டிரைவரே இறங்கிப்போனார்...

"ஐயா...இத உங்ககிட்ட கொடுக்கச்சொன்னாங்க..." என்று ஒருவன் கிப்ட்டை நீட்டினான்.

'யார் அனுப்பிருப்பாங்க?' கிப்ட்டின் முகப்பு லேபிளில் பார்த்தால் 'சிதம்பரம்' என்றிருந்தது...

'எந்த சிதம்பரம்?' என்று திரும்பியவருக்கு அதிர்ச்சி...அங்கே நின்றது சக்ரவர்த்தி...

"ஆ...நீயா?"

அடுத்து சுதாரிப்பதற்குள் கிப்ட்டுக்குள் இருந்த வஸ்து உயிர் பெற்றது...நிமிடநேரத்தில் காரின் உலோகப்பாகங்களுடன் வேலுச்சாமியும் சிதறினார்.

அமைதியாக திரும்பிப்போனார் சக்ரவர்த்தி.

(நாளை தொடரும்)

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home