மனிதன்பாதி...2-(அறிவியல் தொடர்கதை)

ஸ்பென்ஸருக்கு சக்கரவர்த்தியும் தேவ்வும் போயிருந்தார்கள்...

"மிஸ்டர் சிதம்பரம் மிஸ்டர் சிதம்பரம்...கொஞ்சம் நில்லுங்க"

பின்னாலிலிருந்து ஒரு பெண்குரல் கேட்டதும் திரும்பினால், "என்ன சார், பார்த்தும் பாக்காதமாதிரி போறீங்க...என்னைய ஞாபகமிருக்கா?" என்று சக்கரவர்த்தியை நோக்கி வந்துகொண்டிருந்தாள் ஒரு இளம்பெண்.

"நான் நந்தினியோட ஃப்ரெண்ட் கலா சார். மேரேஜுக்கு கூட வந்திருந்தேனே...."

கலா பேசப்பேச குழப்பமானார் சக்கரவர்த்தி...தேவ்வுக்கும் ஒன்றும் விளங்கவில்லை...
அன்றிரவு தேவ்வுக்கு சுத்தமாக தூக்கம் இல்லை...

'சக்கரவர்த்திக்கு மறுபெயர் சிதம்பரமா? அல்லது சிதம்பரம் என்று இவரைப்போலவே ஒருத்தன் இருக்கிறானா?'
'இவருக்கும் கோவிலில் பார்த்த அந்த லாரிக்காரனுக்கும் என்ன சம்பந்தம்? ஸ்பென்ஸரில் வந்த கலா யார்?'

அவருடைய கேள்விகள் பல பதிலின்றி இருளில் மறைந்தன...

(அடுத்த பதிவில் தொடர்ச்சி)

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home