குடியரசு தினவிழாக்கொண்டாட்டம்

இன்று காலை, எங்கள் கல்லூரியின் குடியரசு தினவிழா கொண்டாடத்தில், சின்ன நாடகம் ஒன்று மனதைக்கவர்ந்தது.

பெரிய விஷயமொன்றுமில்லை. ..அடிக்கடி கேட்கிற கதைதான்...

வெட்டியாக பொழுதைக்கழிக்கும் மூன்று பேர் இருக்கிறார்கள். வருவோர்போவோரிடம் ஏமாற்றிக்காசு வாங்குவதுதான் அவர்கள் வேலை.

ஒவ்வொரு மதத்தினர்களாக அந்தப்பக்கமாக வருகிறார்கள். அவர்களுக்குமுன் அந்த மதத்தினை போற்றுவதுபோல நடிக்கிறார்கள்...அவர்களிடம் ஏமாற்றி தட்சணை மற்றும் காசுகள் வாங்கிகொள்கிறார்கள். அவர்கள் போனபின் அந்தக்காசைவைத்து சூதாடுகிறார்கள்.

உண்மை அந்த மதத்தினர்களுக்கு தெரியவரும்போது, அவர்கள் இவர்களை தங்கள் மதத்திற்கு வந்துவிடுமாறு கட்டாயப்படுத்துகிறார்கள்.

பெரிய இழுபறியாகிறாது...
மோதல் ஏற்படுகிறது...
ஒரு பெரியவர் தலையீட்டால், எல்லாம் சுபமாகி எல்லோரும் நண்பர்களாகி அமைதியாகின்றனர்.

"மதங்கள் மாறினாலும்
இறைமை ஒன்றே !!!
மனங்கள் மாறினாலும்
மனிதம் ஒன்றே !!!"

"மதங்களில்
நமது அடையாளங்களை
தொலைத்துவிடாமல்,
'நாம், இந்தியர்கள்' என்பதை மட்டும்
ஞாபகத்தில் கொள்வோம்"

"மனிதம் வளர்த்து
இந்தியம் காப்போம்."

என்பதுதான் சொல்லாமல் சொல்லப்படுகிறது.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home