கடன் மட்டும் கொடுக்காதீங்க...

வைகைப்புயல் வடிவேலு, ஒருத்தனுக்கு கடன் கொடுத்திருந்தார். ரொம்பநாள் கண்ணிலேயே படாதவன் ஒருநாள் போகிற வழியில் இவரிடம் வகையாக சிக்கிக்கொண்டான்.

"ஏண்டா கடன் வாங்கிறதுக்கு மட்டும் வந்திர்றீங்க... வாங்கினதுக்கப்புறம் தலைமறைவாகிடுறீங்களே எப்புடிடா வெண்ரூ?"

மாட்டிக்கொண்டவனுக்கோ அவசரம்.("வீட்டில் அக்காவுக்கு பயங்கரத்தலைவலி. தலைவலி பாம் வாங்கிட்டு, போறதுக்குள்ள, இவன் வேற...")

அந்தப்பக்கம் ஒருத்தன் வந்தான். "என்னண்ணே, உன்ன பாம் வாங்கியார சொன்னிச்சில்ல அக்கா. இங்க மசமசன்னு நிக்கிற...சீக்கிரம் போண்ணே"

'பாம்' என்றதுமே அதிர்ச்சி வடிவேலுவிற்கு. ('என்னது பாமா? ஐயையோ இப்ப என்ன செய்வேன்?')

இவனுக்கு போன் வருகிறது,"என்னக்கா?...'பாம்'ஆ? ரெண்டு வாங்கிட்டேன். கவலையேப்படாத...இனிமே எந்த தொந்திரவும் இருக்காது..."

வடிவேலு அழ ஆரம்பிக்கிறார்.
"டேய் டேய், ஒண்ணும் செஞ்சிடாதடா...சும்மா ஒரு வெளையாட்டுக்குதான்டா கேட்டேன்.கொடுத்த காசை நீயே வேணாலும் வச்சுக்க. தீபாவளிக்கே பட்டாசு சத்தத்தை டேப்ல ரெக்கார்ட் பண்ணி போட்டுத்தான் கொண்டாடுவேன். உண்மையான பாம்'னா ரொம்ப பயம்டா."

"அடயேண்ணே நீ பயப்புட்ற. நா சொல்றது இந்த தலைவலி பாம். வேணுமா?"

"அடச்சே...அதானே பார்த்தேன். நம்மகிட்ட வாலாட்ட எந்த கொம்பனுக்கு தைரியம் இருக்கு? நாங்கள்லாம் யாரு? புகுந்து வெட்டிடமாட்டோம்..."

(தனக்குள், "நம்ம வீக்னஸ் எப்பிடியெல்லாம் வெளிப்படுது பாரு சே")

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home