கடனும், கட்டைவண்டியும்...

பயங்கர சலம்பல் பேர்வழியான எங்கள் நண்பனின், 'ஊருக்கு வழியனுப்பும்' ஸ்டைலே தனி.

ஒரு தரம், வேறொரு நண்பனின் send off-க்கு எழும்பூர் போயிருந்தோம். பஸ்ஸில் ஏறியமர்ந்தவனிடம் சத்தமாக இப்படி சொன்னான்..."டேய் மச்சான்...ஊரில் நம்ம ராமசாமி பயபுள்ளட்ட 1-ணே கால் ரூபாய் கடன் வாங்கியிருந்தேன்.வட்டியோட சேர்த்து 2 ரூபாய் கேப்பான்...ஏமாந்திடாத...அப்புறம் குப்பன் கிட்ட சொல்லிருக்கேன். அவன் உன்னை கட்டைவண்டியில் வந்து 'பிக்கப்' பண்ணிப்பான்...",

எல்லோரும் பார்த்தார்கள். கூனிக்குறுகிப்போய் பஸ்ஸுக்குள் மறைந்துகொண்டான் ஊருக்குப்போகிறவன்.

வெகுசீக்கிரத்திலேயே பதிலடி கிடைத்தது.

நண்பர்கள் கும்பலாக திருச்சிக்கு கிளம்பினோம்...send off கொடுக்க இவனும் வந்திருந்தான்.

ரயிலில் ஏறியதும், எங்களுடன் கிளம்பிய நண்பன் ஒருவன் இவனைப்பார்த்து சத்தமாக இப்படி சொன்னான்...

"டேய் மச்சான்...போலீஸ் நடமாட்டம் அதிகமாயிடுச்சு. நம்மளது, பகல்ல செய்யிற பிஸினஸ் இல்ல...மாட்டிக்காத...ஜாக்கிரதையா இருந்துக்கோ..."

இவன் ஓடி ஒளிய, இடம் தேடினான்...

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home