தனி ஊடகங்களுக்கு தணிக்கை தேவையா?

தகவல் ஊடகங்கள் பற்றிய கருத்தரங்கு ஒன்றில், மக்கள் எதிர்காலத்தில் நாளிதழ்களையும் வார இதழ்களையும் படிப்பதை விட்டுவிட்டு இன்டர்நெட் மற்றும் ப்ளாக்குகளை படிக்கத் தொடங்கிவிடுவார்கள் என்றார்கள்.(தி ஹிண்டு)

ஏற்கனவே இப்படி பலபேர் இடம்பெயர்ந்து விட்டார்கள் என்பதுடன், சொந்தமாக ப்ளாக்கும் நடத்துகிறார்கள் என்பதுதான் சற்றே வித்தியாசமான விஷயம்.

ஒரு பத்திரிக்கையின் அல்லது ஒரு எழுத்தாளனின் வாசகன், இன்னொரு பத்திரிக்கை நடத்தமுடியுமா? தனக்கு தோன்றுகிற எந்த கருத்தானாலும் மாவூடகங்களில்/நாளிகைகளில் வெளிப்படுத்த முடியுமா? ஒரு கருத்துக்கு மறுகருத்து சொல்லமுடியுமா? எல்லாவற்றுக்கும் பதில் - ப்ளாக்.

இதழ்களில், வேறொரு கருத்துக்கு மீத்தொடுக்க முடியாது... சில எல்லைக்குட்பட்ட விஷயங்களைத் தவிர வேறு எதையும் படிக்கமுடியாது... (கமெர்ஷியலுக்காக சில விஷயங்களை பண்ண வேண்டியிருக்கிறது)

மேலும் அந்த கருத்தரங்கில், 'ப்ளாக் என்பதுதான் எதிர்காலத்தில் நிலைபெறப்போகிற சக்திவாய்ந்த ஊடகம் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பலபேர் தருகிற தகவல்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிறது. இதற்கு என்ன செய்வது?' என கையை பிசைந்தார்கள்.

உண்மையான தகவல்களை மட்டுமே பதிவுசெய்வதற்கும் அல்லது எதிர்விளைவை ஏற்படுத்துகிற பதிவுகளை கட்டுப்படுத்துவதற்கும் ஒரு தணிக்கை ஏற்படுத்துவது என்பது கடினமான விஷயம்...கண்காணிப்பது அதைவிட கஷ்டம்.

சுமார் ஆயிரம் தமிழ் பதிவகங்கள் இருக்கின்றன. சராசரியாக ஒரு நாளைக்கு நூறு இடுகைகள் தரப்படுகின்றன என்று வைத்துக்கொள்வோம். எத்தனைபேரை தேடித்தேடி சரிசெய்துகொண்டிருப்பீர்கள்? எல்லாவற்றையும் வாசிப்பவர்களுக்கு எது உண்மை என புரிய வைப்பது இன்னும் சிரமம்.

(அப்படிப்பட்ட தணிக்கைகள், வெகுஜன ஊடகங்களான தனியார் தொலைக்காட்சிகளுக்கும், பேரிதழ்களுக்கும் இல்லை என்பதை மறந்துவிடக்கூடாது. அங்கே தரப்படுகிற எல்லா தகவல்களையும் எதன்பேரில் நாம் நம்புகிறோம் சொல்லுங்கள்)

தி ஹிண்டு, நம்பகமான விஷயங்களைத்தான் தருவார்கள் என்பது எப்படி எல்லோருக்கும் தெரிந்தது? அதே போலத்தான் இதையும் அவர்கள் தானாக தெரிந்துகொள்ளவேண்டியிருக்கும்.

நம்பகமான/எதிர்விளைவை ஏற்படுத்தாத விஷயங்களைத் தருவது ஒவ்வொரு ப்ளாக்கரின் கடமைதான் எனினும் தனிக்கூடாரம் போட்டு மற்றவர்கள் எழுதுவதை கட்டுப்படுத்தமுடியாதே?

முன்னெல்லாம் இதுதான் தகவல் என சொல்வதற்கே தகவல் இருக்காது...அப்படியே இருந்தாலும், ஆராய்ந்து தெரிந்துகொள்வதற்கு வழியின்றி இருந்தது. இப்போது அப்படியில்லை. ஒரு வார்த்தையை கொண்டே பலவற்றை பெற வழியிருக்கிறது.

இதனால், இணைய வாசகனுக்கு ஒரு புதிய பொறுப்பும் தரப்படுகிறது...

ப்ளாக்குகள் மூலம் தகவல்கள் தெரிந்துகொண்டவுடன், உண்மையை தானாக ஆராய்ந்து உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதுதான் அது.

1 Comments:

Blogger viswa said...

rombo nalla sonninga

5:54 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home