வியாழன், ஜனவரி 12, 2006

"ஏன் லேட்டு?"

மூன்றாம் வருட பொறியியல் படிப்பின்போது,
ஒரு நாள் வகுப்பிற்கு ரொம்ப லேட்டாக வந்து சேர்ந்தான் என் நண்பன்
(படு வெகுளியான இவனை யாராவது கோபமாக திட்டினால் சிரித்துவிடுவான். இவன் மற்றவர்களிடம் கோபப்பட்டு பார்த்ததில்லை).

அப்பொழுது, கணிதப்பேராசிரியர் வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தார்.
தாமதமாக வந்தவனைக் கண்டதும் பயங்கரக்கோபம்...
"ஏன் லேட்டு?" என்றார் கோபத்துடன்.

"அதுவா சார், நான் ஸ்டாப்பிங்க்கு வந்துட்டேன் சார்.
பஸ்ல ஒரே கூட்டம். தொங்கிகிட்டு வந்தாங்க்ய.
ஃப்ரீயா வந்த பஸ்ல பொறுமையா வந்தேன். அதான் லேட்டாயிடுச்சு" என்றான் அப்பாவியாக.

ஆசிரியருக்கு கோபம் தலைக்கேறியது.
"அப்படீன்னா இங்க இருக்கவனெல்லாம் இங்கேயே குடிசை போட்டு தங்கி, காலைல எந்திரிச்சு வர்றானுங்களோ?"

இப்படி அவர் கேட்டதற்கு...

அவன் சிரித்தேவிட்டான்...

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home