டெஸ்டும், மாட்சும் !!!
அடுத்தநாள் மிக முக்கியமான பரீட்சை...
இன்று மாலையிலிருந்து டிவியில், இந்தியா-தென்னாப்பிரிக்கா கிரிக்கெட்டில் இந்தியா ஜெயித்து, 'மேன் ஆப் த மேட்ச்' கொடுக்கிறவரை பார்த்தாச்சு...
இரவு 11 மணி. எப்படி படிப்பது அடுத்த நாள் பரீட்சைக்கு?
"ஏண்டா கவலப்பட்ற? இருக்கவே இருக்கு பிட்டு. டேய் மச்சான் அந்த 'மர ஸ்கேலை' எடுத்தா?" .
மர ஸ்கேலில் எல்லா பதில்களும் இடம்பெயர்ந்தன...
"மச்சான் நீதான் முன்னால இருக்க. நீயே இதை வச்சுக்க. பரீட்சை ஆரம்பம் ஆனதும் அப்படியே எல்லோரும் எழுதவேண்டியதுதான். என்ன சரியா?"
ஆனால், விதி அவர்களுடைய விஷயத்தில், 'பிட்ச் போட்டு' விளையாடியது.
முன்னால் இருக்கிறவனோடு அந்த காலின் நம்பர் முடிந்து, மீதி இருக்கிறவர்களையெல்லாம் அடுத்த அறையில் போட்டுவிட்டார்கள்...
இவர்களுக்கெல்லாம் ஒரே குமைச்சல்...("சே எல்லா பிட்டும் அவன்ட்ட மாட்டிக்கிச்சே?")
எல்லாம் முடிந்து வெளியே வந்ததும், அவனைப்பார்த்து, (வயிற்றெறிச்சலுடன்) "டேய் ஒரு கலக்குகலக்கிருப்பியே?"
"எங்க....?அதான் எல்லாத்தையும் ரூம்லயே மறந்து வச்சிட்டுவந்திட்டனே !!!" என்றான் நொந்துபோய்.
1 Comments:
:))
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home