BAPASI 29வது புத்தகக்காட்சி - ஒரு திருவிழா

எல்லோருக்கும் சிற்றிலக்கியங்கள் பற்றி ஒரு awareness கிடைத்திருப்பது, ஆரோக்கியமான விஷயம்.

புத்தகப்பிரியர்கள் அதிகரிப்பதில் லாபம் எல்லோருக்கும்தான். மொழிக்கு உட்பட...
எல்லோரும் கட்டாயம் படிக்கவேண்டும் என்ற நல்லெண்ணத்தில், மிகக்குறைந்த விலையில் கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் ஆகியவைகளை வெளியிட்டிருக்கிறார்கள். (கையடக்க பொ.செ. பதிப்புகளில், சுருக்கியிருப்பார்களோ?) வரவேற்கவேண்டியது.

எப்பொழுதும் இல்லாமல், திடீர் புகழ்பெற்ற சில புத்தகங்களையும் பார்க்கமுடிகிறது. (சுந்தரகாண்டம், சூ|டோ|கூ, Albert Einstein...)

இது தவிர 'உன் வாழ்வு உன் கையில்' என்பது போன்ற சுயமுன்னேற்றநூல்கள், குழந்தைபுத்தகங்கள், சமையல் புத்தகங்கள், நிறைய இலக்கிய நூல்கள், ஒரு பெரிய திருவிழாதான் அது.

மூலிகை மருத்துவநூல்கள் வாசிக்கும்போது, கடுக்காய் கதை ஒன்று ஞாபகம் வந்தது(அடுத்த பதிவில் அதைத்தான் சொல்லபோகிறேன்).

வழக்கமாக, நிறைய மி.மு.ம.க்களை(VIP தமிழாக்கம்) இங்கே பார்க்கலாம்.

சென்ற தடவை, (சமீபத்தில் மறைந்த) சுரா அவர்கள், சுகிசிவம்,கனிமொழி, ருத்ரன், 'நக்கீரன்' கோபால், டைரக்டர் விக்ரமன் ஆகியோர் இருந்தார்கள்.

அப்பொழுது, அப்பாவிற்காக வாங்கிய 'நெடுங்குருதி'யில் கையெழுத்திட்டுத்தந்தார் மனுஷ்யபுத்ரன்.

இன்று மனுஷ்யபுத்ரனையும், பத்ரி(கிழக்கு பதிப்பகம்)யையும் பார்க்கமுடிந்தது.

'காயிதே'க்கு வெளியில் பழைய புத்தகங்கள் கடை 'காயுமே' என்று நினைத்தது தப்பு...பயங்கர கூட்டம் அங்கேயும்...

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home