வைகைப்புயலும் பேப்பர்திருத்துதலும்...

வைகைப்புயல் வடிவேலு, ஆசிரியராக இருக்கும்போது, 'மஜாவாக' விடைத்தாள்கள் திருத்தப்போனார்.

விடைத்தாள்களில், பக்கம் பக்கமாக கதை எழுதிவைத்திருப்பதைக் கண்டு ஆத்திரமடைந்தார் வடிவேலு,

"அங்க வந்தேன் டெர்ம் டெஸ்ட்ல கதையடிச்சு வச்சிருந்திங்க, போனாபோகுதுனு பெருந்தன்மையா பாஸ்போட்டுட்டு வந்தேன். இப்போ யுனிவர்ஸிட்டி எக்ஸாம்லயே பக்கம்பக்கமா எழுதிவச்சிருக்கேனா,

புரிஞ்சுபோச்சுடா புரிஞ்சுபோச்சு. இனிமே 'யாரையும் ஃபெயில் ஆக்க மாட்டேன்'னு எங்க சீஃப்கிட்ட சத்தியம் பண்ணதை எப்படியோ ரகசியமா தெரிஞ்சுவச்சுக்கிட்டுதானே இப்படி எழுதிவச்சுருக்கீங்க?

சத்தியத்தை இப்பவே கான்சல் பண்ணிபுடுவேன்டா...கான்சல் பண்ணிபுடுதேன்.

ஏழுவயசு புள்ளையா இருந்தபோது எங்கப்பன்ட்ட 'எக்ஸாம்னா என்னப்பா?'னு ஒரு ஆர்வத்துல கேட்டேன்...

உடனே, 'சிவனே'னு ரோட்ல போனவனை உட்காரவச்சு, எக்ஸாம் எழுதவச்சு,அதை திருத்தி, 'இதாண்டா மவனே எக்ஸாம்'னாரு...அப்பேற்பட்ட எச்சீகேட்டட் ஃபேமிலியில பிறந்த எச்சீகேட்டட் ஆளுக்கு பிறந்த எச்சீகேட்டட் ஆளுடா இந்த புலிப்பாண்டி..."

4 Comments:

Blogger நிலா said...

not bad... concept nalla irukku. accent should have been better I think

1:20 AM  

Blogger Karthikeyan said...

ஓகே :-)

2:32 AM  

Blogger G.Ragavan said...

நல்ல முயற்சி கார்த்திகேயன். இன்னும் சிறப்பாக எழுத எனது வாழ்த்துகள்.

3:35 AM  

Blogger kirukan said...

very nice

7:45 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home