ஆஸ்பத்திரியில் சிவனும் பார்வதியும்...

ரொம்பச் சிறிய வயதில் எங்கள் பாட்டியிடம் கதை கேட்டுக்கொண்டே தூங்குவது வழக்கம். பெரும்பாலும் பாட்டி சொல்வது ஆன்மீக கதைகள், ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி(பலமுறை ரிப்பீட்டு),விக்கிரமாதித்தன்...

தமாசு என்னவெனில், கதை சொல்லும்போதே பாட்டி தூங்கிவிடுவார்கள்...நான் மேலும் சொல்லச்சொல்லி நச்சரிப்பேன்...தூக்க கலக்கத்தில் ஆன்மீக கதைகள் எல்லாம் 'கூத்துக்காரனிடம் சிக்கிய கிருஷ்ணர் கதை'போலாகிவிடும்.

இராமர் கதையை ஒரு தடவை இப்படி முடித்தார்கள்.
"....அப்புறம் ஸ்ரீராமரை எல்லோரும் சேர்ந்து பஸ் ஏற்றி விட்டார்கள். வ்ளோதான் போ"

இன்னொரு தரம் சிவன் பார்வதி கதையில், "....சிவனைக் காணாமல் பார்வதி ஆஸ்பத்திரி முழுவதும் தேடினார்" என்று முடித்தார்.

(அதென்ன 'கூத்துக்காரனிடம் சிக்கிய கிருஷ்ணர் கதை'? என்று கேட்பவர்களுக்கு காஞ்சிபுரம் செய்யானூரில் நடந்த மகாபாரத கூத்தைப்பற்றி பிரிதொருமுறை சொல்கிறேன்)

மீண்டும்...(விடாது கருப்பு)

3 Comments:

Blogger Sud Gopal said...

"....சிவனைக் காணாமல் பார்வதி ஆஸ்பத்திரி முழுவதும் தேடினார்"

நல்ல பகடி தான்.தொடருங்கள்.

9:05 PM  

Blogger Karthikeyan said...

நன்றி சுதர்சன் அவர்களுக்கு,

5:22 AM  

Anonymous k.veeramuni said...

very nicepost
by
www.aanmigakkadal.blogspot.com

12:39 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home