ஐயோ பேயீ...பாகம் II

திருச்சி அங்காளம்மன் பொறியியல் கல்லூரியில் படித்தபோது நடந்த நிறைய விஷயங்களை என்னால் மறக்கமுடியாது...

(திருச்சி-சென்னை) தேசிய நெடுஞ்சாலையில், கல்லூரி உள்ளடங்கி அமைந்துள்ளது. காலேஜைத் தாண்டி இன்னும் கொஞ்சம் உள்ளே போனால் எங்கள் மாணவர் விடுதி வரும்...அங்கே இன்னும் எங்கள் சந்தோசக்குரல்கள் கேட்பதாக 'ஞாபகம் வருதே ஞாபகம் வருதே'...

ஒரு தடவை என் சீனியர் மக்கள் இரண்டு பேர் Second Show போய்விட்டு நள்ளிரவு 12.00 வாக்கில், விடுதிக்கு நடந்துவந்துகொண்டிருந்தார்கள். எங்கு பார்த்தாலும் இருமை...

திடீரென...
ஒரு குரல் கேட்டது...
நெடுஞ்சாலையிலிருந்து வந்த ஒரு குழந்தையின் அழுகுரல்...

ஆள் நடமாட்டத்திற்கு கொஞ்சம் கூட வாய்ப்பில்லாத அந்த நேரத்தில், 'ஊம் ஊம்' என்று அழுவதுபோல இருந்த அந்த குரலை கேட்டதும், 'பகீர்' என்றது...எடுத்தார்கள் ஒரு ஓட்டம் காஸ்டலுக்கு...

விடுதிக்கு வந்து நண்பர்களை எழுப்பி விவரம் சொல்லவும், எல்லோரும் கிளம்பினோம் ஒரு ஆர்வத்தில்.

சுமார் 15-20 பேர். தைரியமாக நெடுஞ்சாலையை நோக்கி நடந்தோம்... நெருங்க நெருங்க அந்த "ஊம் ஊம்" சத்தம் கேட்க ஆரம்பித்தது...எங்கிருந்தோ பயம் வந்து ஒட்டிக்கொண்டது... ("டேய் மச்சான் இப்பவும் ஒன்னும் கெட்டுப்போகல. Up and Down போட்டு அப்படியே காஸ்டலுக்கு ஓடிடலாம்")

ஆனால், தைரிய சிகாமணிகள் மேலும் முன்னேறினார்கள்... நெருங்கி அருகே போய் பார்த்தால்....

நெடுஞ்சாலையில், லாரி போன்ற வாகனங்கள் போகும்போது தார்ச்சாலையிலிருந்து "விர்விர்"ரென்று கிளம்பிய ஒலி, தூரத்திலிருந்து 'குழந்தையின் குரலாக' கேட்டிருக்கிறது.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home