மகாகவி பாரதியும் Virtual Realityயும் (எங்கோ படித்தது)

எழுத்தாளர் சுஜாதா அவர்கள் சொல்வது போல மகாகவி பாரதி ஒரு வார்த்தை விஞ்ஞானி...

'பாரதி' திரைப்படத்தில் வரும் இந்தப்பாடலில் அது தெளிவாகிறது...

"நிற்பதுமே நடப்பதுமே பறப்பதுமே
நீங்களெல்லாம் சொப்பனம்தானோ வெறும் தோற்றமயக்கங்களோ..." (பல்லவி)

"வானகமே இளவெயிலே மரச்செறிவே
நீங்களெல்லாம் கானலின் நீர்தானோ வெறும் காட்சிப்பிழைதானோ..." (சரணம் 1)


- பாடலில் தோன்றுகின்ற 'காட்சிப்பிழை','தோற்றமயக்கங்கள்' ஆகிய வார்த்தைகள் நவீன உலகின் Virtual Realityயைக்குறிப்பதாக உள்ளன.

டாவின்சி வரப்போகிற விஞ்ஞானத்தை ஓவியத்தில் வரைந்தார்... மகாகவி தன் கவிதைகள் மூலம் வார்த்தைகள் தந்தார்...

(தமிழ் இதழ்களின் முதல் கார்ட்டூனிஸ்ட் மகாகவி பாரதிதான் என்பதும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்)

2 Comments:

Blogger Santhosh said...

கார்த்தி,
உங்களைப்பற்றி தினமலரில் வந்து இருக்கிறது பாத்திங்களா? வாழ்த்துக்கள்.

7:53 AM  

Blogger Karthikeyan said...

ஹய்யோ...

ஒரே குஷியாகிவிட்டேன் சந்தோஷ்...மிக்க நன்றி.

உங்களைப் போன்ற மற்றொரு நண்பர் எனக்கு இந்த விஷயத்தை சொன்னார்...

நூலகம் சென்று தினமலரை தேடி எடுப்பதற்குள் ஒரே ரகளை !!!

மிக்க நன்றி தினமலருக்கு...

ரஜினிராம்கிக்கும், மதி அவர்களுக்கும் என் நன்றி...

12:42 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home